Sunday, 3 August 2014

சதுரங்க வேட்டை சினிமா விமர்சனம்

“இந்த சமுதாயம் எனக்கு என்ன செய்ததோ அதையே அந்த சமுதாயத்துக்கு நான் திருப்பிச் செய்கிறேன்…” என்கிற அடாவடி ஹீரோவை “அன்பைக் கொடு… அதையே திரும்பப் பெறுவாய்…” என்கிற ஹீரோயின் மாற்றும் கதை.
இதை இந்த அளவுக்கு சீரியஸாகச் சொல்லாமல் ‘பஜார்ல உஜாரா இல்லேன்னா நிஜாரை அவுத்துருவானுங்க…’ என்ற அளவில் நிஜத்துக்கு நெருக்கமாக ஒரு மெசேஜையும் வைத்து இயல்பாகச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் எச்.வினோத்.
‘இளிச்சவாயன்கள் இருக்கும் ஊரில் ‘இடிச்சபுளி செல்வராஜ்’ கூட நாட்டாமைதான்’ என்கிற அளவில் ஊரில் என்னென்ன எத்துவாளித்தனங்கள் நடக்கின்றனவோ அவற்றை மொத்தமாகக் கொள்முதல் செய்து காசு பார்க்கும் ஹீரோவைப் பற்றிய கதை.
‘மண்ணுளிப்பாம்பு’ தொடங்கி ‘எம் எல் எம்’, ‘ஈமு கோழி’, ‘தங்க நகை ஆஃபர்’, மற்றும் ‘ரைஸ் புல்லிங்’ வரை ஏமாறும் மக்களுக்கு ஆப்பு வைக்கும் பாத்திரத்தில் வருகிறார் ஹீரோ ‘நட்டி’ என்கிற நட்ராஜ் சுப்ரமணியம்.
அன்றாடம் இப்படி ஏதோ ஒரு அவலம் நம்மைக் கடந்து போய்க்கொண்டிருக்க, அவற்றின் காரணகர்த்தாவாக வரும் நட்டி, நமக்கு நன்றாக அறிமுகமானவரைப் போல் படம் ஆரம்பித்த பத்து நிமிடத்தில் ‘அண்டப்புளுகு ஐடி கார்டு’ காட்டி நம்மருகே வந்து உட்கார்ந்து கொள்கிறார். ‘கேப்பையில் நெய்யுடன் சேர்த்து ஆலிவ் ஆயிலும் வழிகிறது…’ என்று அவர் சொன்னால் அதை நாம் நம்பியே ஆக வேண்டும் போல் அவ்வளவு சொல்சுத்தம்.
“கத்தியில்லாம ரத்தம் பாக்காம, காசு பாக்க பல வழிகள் இருக்கு… அதுல நான் ஒண்ணை உங்களுக்குச் சொல்லித்தரேன்…” என்று ஆரம்பித்து ஒரு குற்றத்துக்குத் திட்டம் தீட்டுவதிலும், “என் ப்ளான் என்னன்னு உனக்குப் புரிஞ்சுதா..?” என்று ஒரு மொக்கை ரவுடியிடம் கேட்டு அவன் “இல்லை…” என்று சொன்னதும் “உனக்கே புரிஞ்சுடுச்சுன்னா வேற ப்ளான் யோசிக்கலாம்னுதான்…” என்று அதைத் தீட்டிக் கூர் பார்ப்பதிலுமாக நட்டி, ‘சம்திங் நாட்டி.’ [அவரது பாத்திரப் பெயர் 'காந்தி பாபு' (!)]
Sathuranga Vettai‘பலநாள் திருடன்…’ பழமொழியாக ஒருநாள் பொறி வைத்துப் பிடிக்கிற போலீஸிடமும் அசராமல் அவர், “ஏமாறனும்னு வர்ர மக்களுக்கு நான் ஒரு வாய்ப்பு கொடுக்கிறேன் சார்…” என்று சர்வ அலட்சியமாகச் சொல்வதில் தொடங்கி, போலீஸின் அத்தனை ‘கவனிப்புகளை’யும் கடந்து கோர்ட்டிலிருந்து விடுதலை ஆகும்போது ‘கெத்து நடை’ காட்டுவது வரை நட்டியின் கம்பீரம் அபாரம்..!
ஏமாற்றுவதையே மூச்சாகக் கொண்ட நட்டியையே “நீங்க ரொம்ப நல்லவர் ஸார்…” என்று நேர்மறையாகப் பார்த்து ஒருதலையாய்க் காதல் கொள்ளும் இஷாரா படத்தின் நாயகி என்பதைத் தாண்டி இன்னொரு ஹீரோவாகவே தெரிகிறார். காரணம், படத்தின் அடிநாதம் இஷாரா மேலேயே ஏற்றப்பட்டிருக்கிறது.
ஊர் ஊராகத் துரத்தித் துரத்தி அடித்து உதைக்கப்பட்டு ரத்தச் சகதியில் இருக்கும் தனக்கு சிகிச்சை அளிக்கும் இஷாராவிடம், “என் மேல உனக்குக் கோபமே இல்லையா..?” என்று நட்டி கேட்க, “உங்க அம்மா உயிரைக் காப்பாத்த யாராவது பணம் கொடுத்திருந்தா நீங்க இப்படியெல்லாம் தப்பு பண்ணியிருக்க மாட்டீங்க இல்ல..?” என்று பதில் சொல்லி அவருக்குள்ளும் இருந்து புனிதனை மீட்டெடுக்கும் இஷாரா, இளவயது தெரசா..!
மண்ணுளிப்பாம்புக்கு ‘இளைய தளபதி விஜய்’ என்று நட்டி வைக்கும் பெயரில் மகிழ்ந்து, சத்தம் கேட்டால் பாம்புக்கு ஒத்துக்கொள்ளாது என்று கார் ஸ்டீரியோவைக்கூட பாய்ந்து ‘ஸ்விட்ச் ஆஃப்’ செய்யும் அப்பாவிச் செட்டியாராக இளவரசு வருவது கொஞ்ச நேரமே ஆனாலும்…



No comments:

Post a Comment