சுலபமாகப் பணம் சம்பாதிக்க வழியில்லாத சில பல ஆண்டுகளுக்கு முன்னால் குறுக்கு புத்திசாலிகள் ‘சுலபமாகப் பணம் சம்பாதிப்பது எப்படி..?’ என்று புத்தகம் போட்டு ‘பைசா’ பார்த்து வந்தார்கள். இப்போது சுலபமாகப் பணம் சம்பாதிக்க ஏகப்பட்ட வழிகளை சினிமாக்களே சொல்லித்தர ஆரம்பித்து விட்டன.
‘கிரிக்கெட் சூதாட்டப் பணத்தை தேட்டை போடுவது எப்படி..?’, ‘பேய்க்கதை சொல்லி பல கோடி மதிப்புள்ள வைரத்தை ஆட்டையைப் போடுவது எப்படி..?’, ‘வங்கிப் பணத்தை வெளியே கொண்டு வந்து டபுளாக்குவது எப்படி..?’, ‘இன்சூரன்ஸ் பணத்தை நிறுவனத்தின் கண்ணில் மண்ணைப் போட்டு சுருட்டுவது எப்படி..?’, ‘மல்டி லெவெல் மார்க்கெட்டிங்’, ‘மண்ணுளிப்பாம்பு சீட்டிங்’ என்று பத்தில் நான்கு படங்கள் இப்படி ஊரார் பணத்தை சுருட்டச் சொல்லித் தருகின்றன.
அந்த வரிசையில் சுபலமாகப் பணம் பண்ணும் ஒரு ஜோடியின் கதை இது. ஆனால், இதில் பொதுமக்களையோ, வங்கியையோ ஏமாற்றாமல்… ஆனால், அப்படி ஏமாற்றி சேர்த்த சொத்தை, ஹீரோவும், ஹீரோயினும் ஏமாற்றி அபகரிக்கிறார்கள். அந்த வகையில் திருப்தி அடையலாம். ஆனால், ஏமாற்றி சேர்த்த சொத்தை ஏமாற்றி அடையலாம் என்று இ.பி.கோவில் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறதா என்ன..?
ஆனால், இந்த நியாய தர்மங்களைத் துக்கிப் போட்டு விட்டு த்ரில்லாக ஒரு படம் பார்க்கும் அனுபவத்தைத் தர முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் அருண் மோகன்.
மாட்டிக் கொள்ளாமல் ‘துட்டு’ கிடைக்கும் என்றால், எந்த ரிஸ்க்கும் எடுக்கத் தயாராக இருக்கும் நாயகன் நவீன் சந்திரா ஒரு ஆர்க்கிடெக்ட். தன்னை அவமானப்படுத்திய தொழிலதிபர் நரேனைப் பழிவாங்க ‘குவாட்டர்’ வழி கூடக் கிடைக்காமல் குமைந்து ‘ஃபுல்’ அடித்துக் கொண்டிருக்கிறார்.
மட்டன் கடைக்குக் கிளம்பும் நேரத்தில் மஜீத் பாய் வீட்டு ரம்ஜான் பிரியாணி வீட்டுக்கே பார்சல் வந்தது போல் அந்த நேரம் பார்த்து நரேனின் மகள் சலோனி அப்பாவுக்குத் தெரியாமல் அந்தா பெரிய வீட்டிலிருந்து ‘எஸ்’ ஆக, அவரைச் சந்திக்கும் நவீனிடம் அடைக்கலம் கேட்கிறார்.
செலவுக்குப் பணம் தராத அப்பாவைப் பழிவாங்கும் மூடில் ‘சலோனி’யும் இருக்க… அவர் ஐடியாப்படியே ஒரு கடத்தல் நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். நினைத்தபடியே எல்லாம் நடந்து 30 கோடி கைக்கு வந்துசேர… சலோனியைத் திட்டமிட்டபடியே அவர் அப்பாவிடம் நவீன் அனுப்ப… டிவி சேனலில் சலோனி கொல்லப்பட்ட செய்தி வருகிறது – இடைவேளை..!
அதற்குப்பின் பார்த்தால் நவீனின் வீட்டு காலிங் பெல் அடிக்க… போய்த் திறந்தால் சலோனி உயிருடன் நிற்கிறார் – கூடவே அவர் அப்பா நரேனும்..! ‘அடடா… அடடா…’ என்று நிமிர்ந்தே உட்கார்ந்து படம் பார்க்க ஆரம்பித்தால்… அது இவர் இல்லை… இதுவரை சொல்லப்பட்ட கதையில் உண்மை இல்லை… என்று வேறு ஒரு கதை சொல்கிறார்கள்.
படம் முடியும் நேரத்தில் இன்னொரு ட்விஸ்ட் போட்டு அதுவும் அவர் இல்லை… அதுவரை சொல்லப்பட்ட கதையிலும் உண்மை இல்லை… என்று இன்னொரு கதை சொல்லி முடிக்கிறார்கள். கதையை மாற்றிக் கொண்டே இருப்பதில் ஒரு கட்டத்தில் “அட போங்கப்பா…” என்றாகி விடுகிறது...
.jpg)

